யாழில் போதைப்பொருள் பாவித்த 15 வயது மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழில் போதைப்பொருள் பாவித்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் மூளை மற்றும் இதய தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவருடன் இந்த வருடம் யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப் பொருளால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 15 வயதுடைய மாணவன் கடந்த வாரம் கடும் காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாணவன் உயிரிழந்துள்ளார்.

மாணவன் உடலை நீதிபதி நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

விசாரணையில் மாணவன் ஹெராயின் போதைப் பொருளை ஊசி மூலம் பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது.