யாழில் குளத்தில் குளித்த நபருக்கு நேர்ந்த சோகம் !

யாழ்ப்பாணம் வரணி பகுதியில் உள்ள குளத்தில் மூழ்கி உயிரிழந்த நபரின் சடலம். தெற்கு இன்று காலை மீட்கப்பட்டது.

நேற்று மாலை வரணி – குடமியன்குளத்தில் குளிப்பதற்குச் சென்ற 37 வயதுடைய நபரொருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

தொடர் தேடுதலில் காணாமல் போனவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.