க.பொ.த சாதாரண தரத்தில் கணிதத்தில் சித்தியடையாதோருக்கும் வாய்ப்பு – வெளியானது முக்கிய அறிவிப்பு!

க.பொ.த சாதாரண தரத்ன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது, குறைந்தபட்சம் ஐந்து சித்திகளைப் பெற்றவர்கள் கணிதத்தில் புலமை இல்லாவிட்டாலும் உயர்தர வகுப்புகளில் சேர முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின் பிரகாரம் ஐந்து சித்திகளைப் பெற்று கணிதத்தில் புலமை பெறாத மாணவனும் உயர்தரக் கல்வியைத் தொடர முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“இந்த வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களில் ஏறத்தாழ 75 வீதமானவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

முதன்முறையாக பரீட்சைக்குத் தோற்றிய 311,321 மாணவர்களில் 231,982 மாணவர்கள் அதாவது 74.5% பேர் உயர்தரப் பிரிவிற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெற்ற பரீட்சைக்கு மொத்தம் 518,245 பரீட்சார்த்திகள் மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

இந்த ஆண்டு 10,863 (3.49%) மாணவர்கள் 9A பெற்றுள்ளனர். இதற்கிடையில், முதல் பத்து இடங்களைப் பெற்ற மாணவர்களின் முடிவுகளை இம்முறை பரீட்சை திணைக்களம் வெளியிடாது,” என்று அவர் கூறினார்.