யாழில் பைக் ஓட்டிகொண்டு டிக்டாக் வீடியோ எடுக்கும் போது தவறுதலாக கடலில் விழுந்த இளைஞன் மயிரிழையில் உயிர் பிழைத்தார்!

யாழ்ப்பாணம் பருத்துறை துறைமுகத்தில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் கடலில் குதித்து உயிர் தப்பிய சம்பவம் நேற்று (01) மாலை இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து இளைஞருடன் கடலில் கவிழ்ந்தது. சம்பவத்தின் பின்னர் அருகில் இருந்தவர்களினால் இளைஞன் மீட்கப்பட்டதுடன் இராணுவமும் பொலிஸாரும் இணைந்து கடலில் விழுந்த மோட்டார் சைக்கிளை மீட்டுள்ளனர்.