யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் பிறந்து 10 நாட்களே ஆன சிசு ஒன்றின் தந்தை உயிரிழந்துள்ளார்.
ரயில் மீது பேருந்து மோதியதில் பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், குறித்த நபர் உயிரிழந்துள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.