நுவரெலியாவில் அரசு பேருந்து விபத்து ! அதில் பயணித்தவர்களின் நிலை ?

டயகமவில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று இன்று காலை 06.40 மணியளவில் கௌலஹேன பிரதேசத்தில் மண் குழிக்குள் விழுந்துள்ளது.

விபத்து ஏற்பட்ட போதிலும் பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மேலும், இந்த பேருந்து விபத்தால், நேர தாமதத்தால் வேலைக்கு செல்லும் பயணிகள் பலர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.