காட்டுப் பகுதிக்கு விறகு எடுப்பதற்காக சென்ற வயோதிபரொருவர் சடலமாக மீட்பு!

திருகோணமலை – லிங்கநகர் அம்மன் கோயில் காட்டுப் பகுதியில் விறகு சேகரிக்கச் சென்ற முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 30ஆம் திகதி விறகு சேகரிக்கச் சென்ற இவர் வீடு திரும்பாத நிலையில் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான கடற்கரை பகுதியில் நேற்று (01.12.2022) அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டமையும் தெரிந்ததே.

சடலமாக மீட்கப்பட்டவர் திருகோணமலை லிங்கநகர் முருகன் கோவில் 25ஆம் கட்டையில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான நாகரத்தினம் நடேசப்பிள்ளை (வயது 79) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை நகர சபையில் கடமையாற்றி ஓய்வு பெற்றவர் எனவும், சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மரணம் தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.