இலங்கையில் பிடிக்கப்பட்ட மிகப்பெரிய உயிரினம்!

பதுளை, மடுல்சீம பொலிஸ் நிலையத்தில் 14 அடி மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.

இன்று (05-12-2022) காலை 8 மணியளவில் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சிவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மடுல்சீம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எகிரிய பிரதேசத்தில் உள்ள வயல் ஒன்றில் மேற்படி பாம்பைக் கண்டுள்ளார்.

இதையடுத்து, மலைப்பாம்பை அப்பகுதி மக்கள் உயிருடன் பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.