பொலிஸாருக்கு பயந்து ஆற்றில் குதித்து தப்பிக்க முயற்சித்த நால்வரில் ஒருவர் மாயம் !

ஆற்றில் குதித்து தப்பிச் செல்ல முயன்ற நால்வரில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ரத்னபுர, கொடிகமுவ பகுதியில் உள்ள மருந்துக் கடையொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

அங்கிருந்த 4 பேர் தப்பிக்க ஆற்றில் குதித்த நிலையில், 3 பேர் மட்டும் மறுகரைக்கு நீந்தி சென்று மாயமாகினர்.

இதேவேளை நீரில் மூழ்கி காணாமல் போன நபரை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.