இலங்கையில் பெய்த கடும் மழையால் காணாமல் போன தேவாலயம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்குடியிருப்பு பகுதியில் ஏ.35 வீதியில் அரை அடிக்கு மேல் தண்ணீர் ஓடுகிறது.

குறித்த வீதியை பயன்படுத்துவோர் அவதானத்துடன் பயணிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

மேலும் புதுக்குடியிருப்பு இரணைப்பளையில் உள்ள குழந்தை ஏசு தேவாலயத்தின் மேற்கூரை தென்னை மரம் முறிந்து விழுந்ததில் கூரை சேதமடைந்துள்ளது. தேவாலயமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.