தனவரவை பெறப்போகும் இரு ராசிக்காரர்கள்: உங்கள் ராசிக்கு எப்படி அமையப்போகிறது -இன்றைய ராசிபலன்

சுபகிருது வருடம் மார்கழி மாதம் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 25.12.2022. சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார். இன்று பகல் 11.56 மணி வரை துவிதியை. பின்னர் திரிதியை. இன்று அதிகாலை 01.03 மணி வரை பூராடம். பின்னர் இரவு 11.36 வரை உத்திராடம். பின்பு திருவோணம். மிருகசீரிடம், திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷம்
திட்டமிட்ட காரியங்கள் தடங்கல் இன்றி நடைபெறும். பொருளாதாரத்திற்குத் தேவையான உதவிகள் உங்களைத் தேடி வரும். வியாபாரிகள் விற்பனையில் ஏற்றம் காண்பார்கள். பெரியோர்கள் ஆசியால் பிரச்சனைகள் தீரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். வேலை இடங்களில் சுமூகமாக பணி நடக்கும். அரசாங்க ஊழியர்கள் அதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பார்கள்.

ரிஷபம்
கைப்பொருட்கள் களவு போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அரசாங்கக் காரியங்களில் இடையூறு வரும். ஒருவர் உதவியால் அதைச் சமாளிப்பீர்கள். வியாபாரிகள் சின்னச்சின்ன பிரச்சினைகளைச் சந்திப்பார்கள். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை காட்ட வேண்டும். பங்குச்சந்தைகள் அவ்வளவு சிறப்பாக இருக்காது. வாகனங்களில் பழுது ஏற்படும்.

மிதுனம்
அஷ்டமச் சந்திரன் மனதை அலைபாய வைப்பார். கொடுக்கல் வாங்கல் வேண்டாம். அப்படி கொடுத்தால் சாட்சி வைத்துக் கொள்ளுங்கள். வியாபாரம் மந்தமாக நடக்கும். வெளியூர்ப் பயணங்கள் அவ்வளவு சாதகமாக இருக்காது. குடும்பத்தில் குழப்பங்கள் உருவாகும். யாரிடமும் வாக்குவாதம் செய்யாதீர்கள். வேலைக்கேற்ற ஊதியம் உண்டு. பாராட்டும் கிடைக்கும்.

கடகம்
மனதில் நினைத்த காரியம் எளிதில் ஈடேறி மகிழ்ச்சி அடையச் செய்யும். மங்கல நிகழ்ச்சியால் வீடு கலகலப்பாக மாறும். வயதான பெற்றோர்கள் வாயார பாராட்டுவார்கள். பிள்ளைகளின் நடத்தை மனதைக் குளிரச் செய்யும். வேலைகள் சுலபமாக முடியும். நண்பர்களின் ஆதரவு அலைச்சலைக் குறைக்கும். பணவரவு சரளமாக இருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள்.

சிம்மம்
ஆடல் பாடல் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் மனம் ஆசை கொள்ளும். அனாவசியமான செலவுகளால் கடன் வாங்கும் நிலை ஏற்படும். ஆனால் உங்களின் விடாமுயற்சி தொழிலில் வெற்றியைக் காண வைக்கும். சொந்த முயற்சியில் புதிய தொழில்களில் தடம் பதிப்பீர்கள். சிறு வியாபாரிகள் சிறப்பான லாபம் பெறுவார்கள். வேலை பளு அதிகரிக்கும்.

கன்னி
வாக்குக் கொடுத்தால் காப்பாற்ற வேண்டும். இல்லையென்றால் தலைகுனிவு உண்டாகும். என்னதான் எச்சரிக்கையாக இருந்தாலும் சின்னச் சின்ன தொல்லைகள் வந்து சேரும். அதேநேரத்தில் மனைவி மக்கள் ஆதரவாக இருப்பார்கள். வங்கிகளுக்கு செல்லும்போது பணத்தைப் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். அனாவசியமாக பேச வேண்டாம்.

துலாம்
எந்தக் காரியத்தை தொட்டாலும் தடையின்றி நடக்கும். பொருளாதாரத்தில் எதிர்பாராத முன்னேற்றம் கிடைக்கும். வாகனங்கள் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து அனைவரையும் பூரிக்க வைப்பீர்கள். அக்கறையுடன் வேலைசெய்து உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். நிலம் வாங்க அச்சாரம் கொடுப்பீர்கள்.

விருச்சிகம்
உங்கள் முயற்சிகள் முளைவிட்டு மரமாகி நல்ல கனிகளைக் கொடுக்கும். கையில் காசு பணம் தாராளமாகப் புரளும். ஓடி வந்து உதவி செய்யும் நண்பர்களை மறக்காதீர்கள். விருந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அரசியல்வாதிகளின் அன்பைப் பெறுவீர்கள். எங்கு சென்றாலும் புகழும் செல்வாக்கும் தேடிவரும்.தங்க நகைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

தனுசு
அனாவசிய செலவுகள் அலைமோதும். இருப்பினும் அதனால் உங்களின் செல்வாக்கு உயரும். இந்த நாளில் போட்டி பந்தயங்கள் வேண்டாம். பங்குச் சந்தை சரிவைச் சந்திக்கும். உறவினர்களால் பல நன்மைகள் உண்டாகும். ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக இருக்கும். வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை அமோகமாக நடக்கும்.

மகரம்
பூரணச்சந்திரனால் ஓரளவு நன்மை உங்களுக்கு உண்டு. உடல்ரீதியான உபாதைகளை எதிர்நோக்குவீர்கள். மருத்துவச் செலவுகள் வரும். பெற்றோர்களால் மனச் சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். கொடுத்த இடத்தில் குறித்த நேரத்தில் பணம் திரும்பி வராது. வம்பு வழக்குகள் இழுத்துக்கொண்டு செல்லும். வியாபாரத்தில் போட்டிகள் வில்லங்கத்தை கொடுக்கும்.

கும்பம்
இல்லத்தரசிகள் மனம் கோணாமல் நடந்து கொள்வார்கள். விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. பணியாளர்கள் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள். திடீர்ச் செலவுகளால் பணத் தட்டுப்பாடு உண்டாகும். சில நேரங்களில் கவனக்குறைவால் பணம் இழப்புகளும் ஏற்படும். அதே நேரத்தில் உறவினர்கள் உதவி கிடைக்கும். .

மீனம்
வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி அடைவீர்கள். வெளிநாட்டு நண்பர்கள் கேட்ட தொகையை அனுப்பி வைப்பார்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை நீங்கி உறவு பலப்படும். பிள்ளைகள் கல்வி முன்னேற்றம் அடைவார்கள். வெளிநாட்டு பயணங்கள் கைகூடிவரும். அதனால் நல்ல பலன் கிடைக்கும். பந்தயத்தில் வெற்றி பெறுவீர்கள்.