309 சிறைக்கைதிகள் இன்று விடுதலை

நத்தார் பண்டிகையை முன்னிட்டு 3 பெண் கைதிகள் உட்பட 309 சிறைக்கைதிகள் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு இன்றைய தினம் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

சிறிய குற்றங்களுக்காகவும், வேறு காரணங்களுக்காகவும் தண்டனை பெற்றவர்களுக்கு நத்தார் பண்டிகையை முன்னிட்டு மன்னிப்பு வழங்கப்படுவதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.