மட்டக்களப்பு – கறுவாக்கேணி பிரதான வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த பெண்ணொருவரின் கைப்பையை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதன் போது இளைஞர்கள் அவர்களை மடக்கிப் பிடித்து குறித்த பெண்ணின் கைப்பையை திருடர்களிடம் இருந்து பறித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் பிடிக்கப்பட்டு வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இருவரும் ஏனைய மாகாணங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் இதற்கு முன்னர் இவ்வாறான திருட்டுச் சம்பவம் இடம்பெற்றிருந்தால், உங்கள் தகவல்களை வாழைச்சானை பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.