மர்மமாக கொழும்பில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்த யாழ். இளைஞர் !

வெளிநாடு செல்வதற்காக கொழும்பில் தங்கியிருந்த யாழ் இளைஞர் உயிரிழந்துள்ளாக செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இச்சம்பவமானது நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதையடுத்து சடலம் பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் கையளிக்கப்ட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த நபர் யாழ்ப்பாணம் சிறுப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த கணேஷ் துஜீவன் (வயது – 23) என்ற இளைஞன் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் அளித்த முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.