முச்சக்கர வண்டியுடன் பேருந்து மோதி விபத்து விபத்துக்குள்ளானதில் 7 வயது சிறுமி பரிதாபமாக பலி !

பதுளையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸுடன் முச்சக்கர வண்டி மோதியதில் 7 வயது சிறுமி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவமானது பதுளை கஹட்டரூப்ப பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பிட்டிய மல் சந்தியில் அமைந்துள்ளது.

சிறுமியின் தாய் உட்பட மூவர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

கஹட்டறுப்பையில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும், அம்பிட்டியவலில் இருந்து முத்துமாலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியும் அம்பிட்டியமல் சந்தியில் மோதி விபத்துக்குள்ளானது.

முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்ற பெண் உட்பட நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் 7 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் தாயாரே முச்சக்கரவண்டியை ஓட்டி வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுமியின் தாய் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்த சிறுமி முத்துமாலை கோவிபொல கெந்தகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் பேருந்தின் சாரதி கஹட்டருப்ப பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கத்தருப்ப பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.