உள்ளூராட்சி தேர்தல் – வேட்புமனு வர்த்தமானி அடுத்த வாரத்தில்

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கோரல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த மாத முதல் வாரத்தில் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா இதனை தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னதாக உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.