மட்டக்களப்பில் 2 வயது 8 மாதங்களேயான சித்தியின் மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த வாலிபர் கைது !

2 வயது 8 மாத பெண் குழந்தையை துஷ்பிரயோகம் செய்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், குழந்தையை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த 19 வயது இளைஞனை ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி நேற்று உத்தரவிட்டுள்ளார்.

குறித்த இளைஞன் கடந்த சில நாட்களாக சித்தியின் வீட்டில் தங்கியிருந்து சித்தியின் பெண் குழந்தையை தனது மடியில் வைத்து கைத்தொலைபேசியில் ஆபாசப் படங்களை காண்பித்து பாலியல் குறும்புகளை செய்து வந்துள்ளார்.

இதனை அவதானித்த உறவினர் பெண் ஒருவர் குழந்தையின் தாயாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து குறித்த இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.