இன்றைய ராசிபலன் 30/12/2022

சுபகிருது வருடம் மார்கழி மாதம் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 30.12.2022. சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 01.43 மணி வரை சப்தமி. பின்னர் அஷ்டமி. இன்று மாலை 05.25 மணி வரை உத்திரட்டாதி. பின்பு ரேவதி. மகம், பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷம்

விவகாரங்களை வளர்க்காமல் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். உயரதிகாரிகளின் இடையூறு உங்களை சிரமப்படுத்தும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை விலகி இணக்கமான நிலை உருவாகும். பிள்ளைகளின் போக்கை கண்காணியுங்கள். விரயச் செலவுகளை குறையுங்கள்

ரிஷபம்

போட்டி பந்தயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். ஷேர் மார்க்கெட் தொழில் சூடுபிடிக்கும். ரியல் எஸ்டேட் பிசினஸில் நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்களும் உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தொடங்கவேண்டிய தொழிலுக்குத் தேவையான ஆயத்த வேலைகளை செய்வீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை நிலவும்.

மிதுனம்

வியாபாரத்திற்கான உதவிகள் வீடு தேடி வரும். எதிர்காலத்திற்கான சேமிப்பை உயர்த்துவீர்கள். நடைபாதை வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவார்கள்.உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு உற்சாகமான நாள். அரசு வேலைகள் சரளமாக நடக்கும். நிலம் வாங்க முன் பணம் கொடுப்பீர்கள். எதிர்பாராத பண வரவால் தொழிலில் ஏற்றம் பெறுவீர்கள். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

கடகம்

தொழில் செய்யும் இடத்தில் ஏதாவது பிரச்சனைகள் தலை தூக்கும். இயந்திரங்களில் வேலை பார்ப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். மாணவர்களின் கல்விச் செலவு அதிகரிக்கும். வண்டி வாகனங்கள் பழுதாகி சிரமப்படுத்தும். குடும்பத்தில் கோபத்தைக் காட்டாதீர்கள். ஆடம்பரச் செலவுகள் வேண்டாம்.

சிம்மம்

இடையூறுகள் ஏற்படும் வேலைகளை வீம்புக்காக செய்யாதீர்கள். அதனால் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களை ஒத்திப் போடுவது நல்லது. பணியிடத்தில் கவனமாக வேலை செய்யுங்கள். நகைச்சுவையாக பேசுகிறோம் என்று சொல்லி பகையை வளர்க்காதீர்கள். அரசாங்க வேலைகள் தாமதமாகும். கடன் சுமை அதிகரிக்கும்.

கன்னி

நல்ல செய்திகளால் குடும்பத்தில் கலகலப்பு கூடும். தொழில் துறைகளில் எதிர்பாராத வரவு உண்டாகும். வியாபாரிகள் விற்பனையை அதிகரிப்பார்கள். சுப நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் நடக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள். மனைவி மனதிற்கு இதமாக நடந்து கொள்வார்.

துலாம்

ஊக்கமான முயற்சியால் வியாபாரத்திலிருந்த தேக்கங்களை விலக்குவீர்கள்.விலை உயர்ந்த பொருட்களை வாங்கி குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். புதிய சரக்குகளை இறக்குமதி செய்வீர்கள். பழைய கடன்களை அடைக்க பாடுபடுவீர்கள். பணி செய்யும் இடத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். பிள்ளைகளால் பெற்றோருக்கு பெருமை உண்டாகும்.

விருச்சிகம்

வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். கூட இருந்து குழி பறிக்க முயற்சி செய்வார்கள். தொழிலுக்காக நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் நீங்கும். கல்யாண காரியங்களால் வீடு களைகட்டும். அரசு பணியில் இருப்பவர் ரகசியங்களை காக்க வேண்டும். காரியத் தடை ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி பெறுவீர்கள்.

தனுசு

குடும்ப ஒற்றுமைக்கான முயற்சி வெற்றி பெறும். வீடு கட்ட மனை இடம் வாங்குவீர்கள். பணப்பற்றாக்குறை அறவே நீங்கும். சக ஊழியர்களின் உதவியால் சாதனை செய்வீர்கள். வெளிநாட்டு உதவி கண்டிப்பாக கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உயரும்.தாயாருக்கு மருத்துவச் செலவு செய்வீர்கள். அதிக விலையில் புதிய வாகனங்கள் வாங்குவீர்கள்.

மகரம்

புதிய திட்டங்களால் தொழிலை விரிவுபடுத்த விரும்புவீர்கள். சகோதர சகோதரிகள் உதவிகரமாக இருப்பார்கள். தாமதமான அரசாங்க வேலைகள் சாதகமான நிலைக்கு வரும். கேட்ட இடத்தில் பணம் தாராளமாக கிடைக்கும். வித்தியாசமான வியாபாரங்களில் துணிச்சலாக இறங்குவீர்கள். பொறாமையால் வந்த எதிர்ப்புகளை துடைத்து எறிவீர்கள்.


கும்பம்

அண்டை அயலாரிடம் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். உயரதிகாரிகள் கொடுக்கும் உற்சாகம் வேலையை சுலபமாக்கும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். வேலையிட பிரச்சினைகளை துரித முயற்சியால் விலக்குவீர்கள். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும். அரசியல்வாதிகள் நட்பு அனுகூலத்தைத் தரும்.

மீனம்

மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சூட்சுமங்களை கையாண்டு வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். மேல் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். வாகனங்கள் பழுதாகி செலவு வைக்கும். மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் உதவிகரமாக இருக்கும். எதிர்காலம் குறித்து திட்டம் தீட்டுவீர்கள்.

தொழில் செய்யும் இடத்தில் ஏதாவது பிரச்சனைகள் தலை தூக்கும். இயந்திரங்களில் வேலை பார்ப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். மாணவர்களின் கல்விச் செலவு அதிகரிக்கும். வண்டி வாகனங்கள் பழுதாகி சிரமப்படுத்தும். குடும்பத்தில் கோபத்தைக் காட்டாதீர்கள். ஆடம்பரச் செலவுகள் வேண்டாம்.

இடையூறுகள் ஏற்படும் வேலைகளை வீம்புக்காக செய்யாதீர்கள். அதனால் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களை ஒத்திப் போடுவது நல்லது. பணியிடத்தில் கவனமாக வேலை செய்யுங்கள். நகைச்சுவையாக பேசுகிறோம் என்று சொல்லி பகையை வளர்க்காதீர்கள். அரசாங்க வேலைகள் தாமதமாகும். கடன் சுமை அதிகரிக்கும்.