புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் தலையை வெட்டி எடுத்து சென்ற மர்ம நபர்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்

மத்திய மாகாணத்தின் தலகிரியாகம தென்னகோன்புர பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தை தோண்டி எடுத்த சிலர் அவரது தலையை வெட்டி எடுத்துச் சென்றுள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பொது மயானத்திற்கு அருகில் நடந்து சென்ற ஒருவர் இதனை பார்த்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதனைக் கண்ட நபர் உயிரிழந்தவரின் மகளுக்கு அறிவித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

உயிரிழந்தவரின் மகள் கலேவெல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸ் குழுவொன்று அங்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இறந்தவரின் தலையை வெட்டியவர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த தலை மாந்திரீகத்திற்காக எடுக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தென்னகோன்புர பிரதேசத்தில் வசித்து வந்த 80 வயதுடைய பெண் ஒருவர் ஆகஸ்ட் 8ஆம் திகதி உயிரிழந்ததாகவும், அன்றே சடலம் புதைக்கப்பட்டதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.