கண்டிக்கு செல்லும் சுற்றுழா பயணிகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு ! இதை தவிர்க்குமாறு வேண்டுகொள் !

கண்டியில் முச்சக்கரவண்டி சாரதிகள் சட்டவிரோதமான மற்றும் மோசடியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக நாட்டிலுள்ள பல வெளிநாட்டு தூதரகங்கள் தெரிவித்துள்ளதாக கண்டி மாநகர ஆணையாளர் நாயகம் இஷான் விஜேதிலக தெரிவித்தார்.

கண்டியில் நேற்று (29-12-2022) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கண்டியில் முச்சக்கரவண்டியில் பயணிக்க வேண்டாம் என தூதரகங்கள் தமது நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.