மேலதிக வகுப்புகளுக்கு செல்வதாக கூறி கடற்கரையில் நீராடச் சென்ற இரு சிறுவர்கள் பலி

மாத்தறை கடற்கரையில் நீராடச் சென்ற இரு சிறுவர்கள் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர்

மாத்தறை அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய இரு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்

நால்வர் நீராடச் சென்றதாகவும் அதில் இருவர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

வீட்டில் இருந்து மேலதிக வகுப்புகளுக்கு செல்வதாக கூறி சிறுவர்கள் கடற்கரையில் நீராடச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.