ஆயுர்வேத மசாஜ் நிலையமாக இயங்கி வந்த விபாசரா விடுதி – யாழ்ப்பாண பெண் கைது!

ஆயுர்வேத மசாஜ் நிலையமாக இயங்கி வந்த விபாசரா விடுதி – யாழ்ப்பாண பெண் கைது!

ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதியை முற்றுகையிட்ட கல்கிசை குற்றத்தடுப்பு பிரிவினர் முகாமையாளரையும் அங்கு பணியாற்றிய இரு பெண்களையும் கைது செய்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணைகளின் மூலம் முகாமையாளர் குருநாகலைச் சேர்ந்தவர் எனவும், பெண்கள் இருவரும் கோப்பாய் மற்றும் பாயாகலை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், இருவரும் 23 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவுக்கமைய இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டதாகவும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மாறுவேடத்தில் ஆயுர்வேத நிலையத்திற்கு சென்று அந்த நிலையத்தின் சேவைகளை பெற்றுக் கொண்டு உரிய முறையில் கைது செய்ய முடிந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.