யாழில் பிறந்து ஒரு சில நாட்களேயான சிசு ஒன்றின் உடல் நாய்கள் கடித்த நிலையில் மீட்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் பிறந்து ஒரு சில நாட்களேயான சிசு ஒன்றின் உடலை நாய்கள் கடித்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீதி இவ்வாறு சிசுவின் உடலை அவதானித்த அயலவர்கள் உடனடியாக மருதங்கேணி பொலிசாருக்கு அறிவித்திருக்கின்றனர்.

தகவல் அறிந்த மிருதங்கேணி பொலிசாரால் தற்போது தீவிர விசாரணைகள் முடக்கி விடப்பட்டுபட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது

தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிசார் குறித்த சிசுவை புதைத்தவர் அல்லது கொலை செய்தவர் என்று சந்தேகிக்கும் நபரை கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மிருதங்கேணி பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.