யாழில் காதல் தோல்வியால் விபரீத முடிவெடுத்த மாணவி !

யாழில் காதல் தோல்வியால் 19 வயது மாணவி ஒருவர் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது நேற்று முன்தினம் யாழ்ப்பாணம், கொழும்புத்துறையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவி இளைஞன் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.ஆனால் குறித்த இளைஞன் ஏமாற்றியதால் மனமுடைந்த மாணவி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பீரேம்குமார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.