யாழில் தனது குழந்தையை வீட்டின் பின்புறத்தில் உயிருடன் புதைத்த மூன்று பிள்ளைகளின் தாய்! வெளியான காரணம்

முறையற்ற உறவு காரணமாக தனது குழந்தையை வீட்டின் பின்புறத்தில் உயிருடன் புதைத்த மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தஹலியடி கிராமத்தில் வசிக்கும் 36 வயதுடைய பெண்ணொருவர் கடந்த முதலாம் திகதி தனது வீட்டில் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார்.

குழந்தையை வீட்டின் பின்புறம் கொண்டு சென்று அங்கு குழி தோண்டி புதைத்துவிட்டு எதுவும் நடக்காதது போல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று மதியம், குழந்தையை புதைத்த இடத்தை நாய் ஒன்று தோண்டி, சிசுவின் உடலை இழுத்துச் செல்லும் போது, அருகில் இருந்த வீட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், நாய் முயலை இழுத்துச் செல்வதாக நினைத்து நாயை தாக்கியுள்ளார்.

அதன்பின், குழந்தையை நாய் விட்டுச் சென்றதால், அந்த பெண் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, சிசுவின் சடலத்தை மீட்ட பொலிஸார் விசாரணைகளின் பின்னர் சந்தேகத்திற்கிடமான பெண்ணைக் கைது செய்தனர்.

கடந்த 10 மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருந்ததை ஒப்புக்கொண்ட தாய், புது வருடம் அன்று குழந்தையை பெற்றெடுத்துள்ளார்

குறித்த பெண் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.