வவுனியாவில் புதிய தொற்றாளர் இனம் காணப்பட்டுள்ளார் !

வவுனியா, உக்குளாங்குளம் கிராமத்தில் மூன்றாவது டெங்கு நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வவுனியா மாவட்டத்தில் கடந்த மாதம் 7 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இம்மாதம் முதல் வாரத்தில் மேலும் ஒருவர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் இதுவரை 8 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் அதில் உக்குளாங்குளம் கிராமத்தில் மாத்திரம் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அடையாளம் காணப்பட்ட இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற போதிலும் சுகாதார பரிசோதகர்கள் குறித்த இளைஞனின் வீட்டிற்கு சென்று டெங்கு பரவும் அபாயம் உள்ளதா என அவதானிக்கவில்லை என பிரதேச மக்கள் தெரிவித்தனர்.