இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 6 இலட்சம் பெறுமதியான போதை மாத்திரைகளை கைப்பற்றிய இந்திய காவல்துறை!

இலங்கையில் தடை செய்யப்பட்ட சுமார் 6 இலட்சம் பெறுமதியான போதை மாத்திரைகளை இராமநாதபுரம் வேதாளை கிராமத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில் இருந்து தமிழக பொலிஸார் நேற்று கைப்பற்றியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த போதைப் பொருட்களை இலங்கைக்கு கடத்துவதற்காக நாட்டுப்படகில் ஏற்றிச் சென்ற போது வேதாளை கடற்பரப்பில் வைத்து கைப்பற்றப்பட்டதாக கியூ பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

அப்போது, 6 லட்சம் மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்

இந்த நடவடிக்கையின் போது. தலைமறைவான கடத்தல்காரர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

மேலும், கடத்தல் நடவடிக்கைகளை கண்டறிய கடலோர பகுதிகளில் கியூ பிரிவு பொலிஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.