ரணில் பிறப்பித்துள்ள தடை உத்தரவு – இலங்கை மக்களுக்கு தொடரும் நெருக்கடி

இலங்கைக்கு பல வகையான பொருட்களை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனவரி 1, 2023 முதல் நடைமுறைக்கு வரும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், தக்காளி, வெண்டைக்காய், பூசணி, கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, வெள்ளரி, பீன்ஸ் மற்றும் கீரைகள், கொய்யா உள்ளிட்ட பழங்கள், மாம்பழம், தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி, காளான் மற்றும் தொடர்புடைய பொருட்கள், பப்பாளி மற்றும் தொடர்புடைய பொருட்கள், பேரிக்காய் மற்றும் தொடர்புடைய பொருட்கள், பேரீச்சம்பழம், பச்சை பட்டாணி உள்ளிட்ட காய்கறிகள். , முந்திரி, சோயாபீன் பொருட்கள், தேங்காய் மற்றும் தொடர்புடைய பொருட்கள், ஷாம்புகள், கண்டிஷனர்கள் மற்றும் சாயங்கள், பவுடர்கள், உதட்டுச்சாயம், கிரீம்கள், அத்துடன் வாசனை திரவியங்கள், ஆண்கள் உடைகள், பெண்கள் கைக்கடிகாரங்கள், ஆடைகள், பாதணிகள், தோல் மற்றும் ரப்பர் தொடர்பான பொருட்கள், மட்பாண்டங்கள் மற்றும் சமையலறைப் பொருட்கள்ஆகியவற்றிற்கு இவ்வாறு தடை விதிக்ககப்பட்டுள்ளது.