சட்டவிரோதமாக கனடா செல்ல முயன்ற 38 இலங்கையர்கள் விடுத்த கோரிக்கை!

கனடா செல்வதற்காக இந்தியாவிற்கு அழைத்துச் சென்றதாக முகவர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்ட 38 இலங்கை அகதிகள் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 10-06-2021 அன்று கர்நாடக மாநிலம் மங்களூரில் கைது செய்யப்பட்ட இவர்களை விடுவித்த நீதிமன்றம், இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தது.

அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய நீதிமன்றம் 15 நாட்கள் கால அவகாசம் அளித்த போதிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தம்மை அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவில்லை எனக் கூறி கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாட்டிற்குச் செல்ல யாரைத் தொடர்புகொள்வது என்று தெரியவில்லை என்று வருந்துவதாகச் சொல்கிறார்கள்.

தங்கும் விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், உணவு மற்றும் மருத்துவ வசதிகள் இன்றி சிலர் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.