யாழில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அரியாலை குசவம்பலம் வீதியில் கைக்குண்டு ஒன்று காணப்படுவதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
அந்தத் தகவலின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக் கொண்ட பொலிஸார் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினரின் உதவியுடன் செம்மணி பகுதியில் கைக்குண்டை செயலிழக்கச் செய்தனர்.