யாழில் இரவு வேளையில் வீட்டின் மீது விழுந்த தென்னை மரம் ! தெய்வாதீனமாக உயிர் தப்பிய குடும்பம்!

யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் மீது தென்னை மரம் முறிந்து வீழ்ந்ததில் வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

அனலைதீவு மூன்றாம் மாவட்டத்தைச் சேர்ந்த வேலுப்பிள்ளை மார்க்கண்டு என்பவரது வீட்டில் இன்று (06-01-2023) வெள்ளிக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனினும் வீட்டில் வசிப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.