மட்டக்களப்பு ஏறாவூரில் இன்று கடலில் இறங்கிய உயர்தர மாணவர்பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் ஏறாவூரில் அலிகார் தேசிய பள்ளியின் உயர்கல்வி பிரிவு மாணவரும், மாணவர் தலைவருமான தஸ்தகீர் அப்துல் ரகுமான் உயிரிழந்தார்.
உறவினர்களுடன் கடலில் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவன் அமைதியான சுபாவத்தையும், நல்ல பண்புகளையும் கொண்டிருந்ததாகவும், இம்முறை பரீட்சைக்கு முகம் கொடுப்பதற்காக காத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.