உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஆதிவாசிகள் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சுயேட்சையாக போட்டியிடுவதா அல்லது கட்சிகள் சார்பில் தங்கள் பிரதிநிதிகளை நிறுத்துவதா என்பது குறித்து ஓரிரு நாட்களில் முடிவெடுத்து, இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
அதேநேரம், ஆதிவாசிகள் சார்பில் அரசியல் கட்சி பதிவு செய்யும் நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.