இலங்கையில் இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் அழகு சாதனப் பொருட்களின் விலை நான்கு மடங்காக உயர்வு!

இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக இலங்கையில் அழகு சாதன தொழில் முழுமையாக முடங்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக அழகு சாதனப் பொருட்களை கொள்வனவு செய்வதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அழகு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜாக்கி அபோன்சோ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொருளாதார நெருக்கடி மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக, பல இறக்குமதிகள் தடை செய்யப்பட்டன. அழகு சாதனப் பொருட்கள் இதில் அடங்கும்.

இந்நிலையில் அழகு சாதனத் துறையில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. வெளி நாடுகளில் இருந்து அழகு சாதனப் பொருட்களை இறக்குமதி செய்வது பிரச்னையாகிவிட்டது. எங்களுக்கு முன்பு போல் வாடிக்கையாளர்கள் இல்லை.

பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. நாட்டில் வாங்குவதற்குப் பொருட்கள் இல்லை. அவற்றின் விலை நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. சர்வதேச தரத்திலான தயாரிப்புகளுக்குப் பழக்கப்பட்ட மக்களும் அதையே எதிர்பார்க்கிறார்கள்.

எங்கள் டாலர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் இலங்கை இவ்வாறான தயாரிப்புகளை செய்வதில்லை. மேலும் எதிர்காலத்தில் இந்தத் துறையில் முன்னேறுவது கடினம்.

இதனால் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்ட பிறகு, சார்ந்திருப்பவர்களின் கதி என்ன? அவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படும், என்றார்.