யாழில் தைப்பொங்கலை முன்னிட்டு வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் சைக்கிள் ஓட்டப்போட்டி!

தை பொங்கலை முன்னிட்டு இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஏற்பாடு செய்த சைக்கிள் போட்டி இன்று நடைபெற்றது.

அதன்படி இளவாலை சந்தியில் ஆரம்பமான இப்போட்டியானது விளான் சந்தி, தெல்லிப்பழை சந்தி, மாவிதபுரம் சந்தி, கீரிமலை சந்தி, சித்திரமேழி சந்தி ஊடாக இளவாலை சந்தியில் நிறைவடைந்தது.

இதில் நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.