இலங்கையில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்படக்கூடியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிதியுதவி வழங்கிய கனடா!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படக்கூடியவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கனடா 3 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது.

கனேடிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவை இணைந்து இந்த உதவியை வழங்கின.

இதன்படி உணவு, சுகாதாரம், ஊட்டச்சத்து வசதிகள் மற்றும் குடிநீர் தேவைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளை இதன் மூலம் வழங்க முடியும்.