இத்தாலியில் கோர விபத்தில் சிக்கி இலங்கை இளைஞரொருவர் பலி !

இத்தாலியின் நேபிள்ஸ் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளும் காரும் மோதியதில் கடந்த சனிக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 18 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து இத்தாலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.