தமிழகத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்திய ஐஸ் போதை பொருள் பறிமுதல்

தமிழகத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்பட இருந்த 2 கிலோ ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக போதை பொருள் கடத்தப் படுவதாக இலங்கை பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டத்தை அடுத்து போதைப் பொருள் தடுப்பு பொலிஸாரும் , சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரும் இலங்கையின் கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது புத்தளம் கடற்கரையில் இருந்து புறப்பட்ட ஆட்டோவை பொலிஸார் நிறுத்தி சோதனை செய்தனர். ஆட்டோவில் ஐஸ் பெட்டிகளும், ஐஸ் பைகளும் வைக்கப்பட்டிருந்தன. அவர்களை பரிசோதித்தபோது, ஐஸ் போதைப்பொருள் என்பது தெரியவந்தது. போதை பொருள் கடத்திய 2 வாலிபர்களை பொலிஸார் கைது செய்தனர்.

அவர்களில் ஒருவர் போதைப்பொருள் கடத்தல்காரர் என பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழகத்தின் வேதாரண்யத்தில் இருந்து பைபர் படகு மூலம் போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் நடுக்கடலில் இலங்கை படகுக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து இலங்கையின் கல்பட்டி பகுதிக்கு கடத்தப்பட்டது.

பின்னர் அவர்கள் படகில் இருந்த ஐஸ் போதைப்பொருளை ஆட்டோவில் எடுத்துச் சென்றது தெரிய வந்தது. போதைப்பொருள் கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? மேலும் வேதாரண்யத்தில் இருந்து கடத்தியது யார்? விசாரணை நடந்து வருகிறது.