யாழில் தொண்டமனாறு கரையோரத்தில் மீட்கப்பட்ட சடலம் ! பொலிஸார் தீவிர விசாரணை !

யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி கோவிலுக்கு பின்புறம் தொண்டமானாறு கரையில் இருந்து முதியவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆற்றில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.