யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பிரதமகுரு !

யாழில் கோவில் பிரதமகுரு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது யாழ்ப்பாணம் வடமராட்சி பருதித்துறை தம்பசிட்டி பண்டாரி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த பிரதமகுரு சிவஸ்ரீ சபரத்ன தேசிகர் என தெரிய வந்துள்ளது.

இன்று காலை அவரது சடலத்தை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் பருத்துரை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இறந்து போன பிரதம் குரு நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார் என்பது தெரிந்ததே.