டுபாய் சந்தையில் இலங்கை இளநீருக்கு கிராக்கி – பல ஆயிரத்தை தாண்டும் விலை

டுபாய் சந்தையில் இலங்கையின் இளநீர் தேவை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கை இளநீர் தேவை அதிகமாக உள்ள போதிலும், கடந்த காலங்களில் இளநீர் ஏற்றுமதி தொடர்பான பல கொடுக்கல் வாங்கல்கள் மூலம் அந்நாடு பெருமளவு அந்நியச் செலாவணியை இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென்னை அபிவிருத்தி அதிகார சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலையீட்டில் இளநீர் ஏற்றுமதிக்கான ஒழுங்குமுறை அமைப்பு ஏற்படுத்தப்பட்டதன் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஒரு இளநீர் தற்போது அந்நாட்டு துறைமுகத்தில் 0.8 டொலர்களுக்கு (296 ரூபா) கிடைக்கப்பெறுவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் இலங்கை இளநீர் டுபாய் சந்தையில் ரூ.500க்கு விற்கப்படுகிறது.

இதேவேளை, ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் இளநீர், நாட்டின் கரையோரப் பகுதியில் 2500 ரூபா அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெளிநாட்டு சந்தையில் இளநீரின் தேவை மற்றும் விலை அதிகரிப்பு காரணமாக இலங்கை சந்தையிலும் இளநீரின் விலை அதிகரிக்கலாம் என தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு வாரத்திற்கு சுமார் 252,000 தொன் இளநீர் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

2022ஆம் ஆண்டு இளநீர் ஏற்றுமதி மூலம் இரண்டு பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும், இவ்வருடம் எதிர்பார்க்கப்படும் வருமானம் 06 பில்லியன் ரூபா எனவும் தெரியவந்துள்ளது.