யாழில் போதை மாத்திரைகளுடன் 18 வயது வாலிபருடன் சிக்கிய 25 வயது யுவதி !

யாழில் 18 வயது வாலிபருடன் 25 யுவதியும் போதை மாத்திரிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.