யாழில் கணவன் வெளிநாட்டில் வேலை செய்து அனுப்பிய பணத்தில் காதலனுடன் கனடாவுக்கு கப்பலேறிய மனைவி!

கணவன் ஐரோப்பிய நாட்டில் வேலை செய்துவிட்டு யாழில் மனைவிக்கு பணம் அனுப்பிக் கொண்டிருந்த போது மனைவி தனது காதலனுடன் கனடாவுக்கு கப்பலேறிய சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது.

சட்டவிரோதமான முறையில் கனடாவுக்கு செல்ல முயன்ற 300க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நடுக்கடலில் மீட்கப்பட்டு வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சட்டவிரோதமாக கனடாவை விட்டு வெளியேறி பிடிபட்டவர்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவர், அவரது கணவர் வெளிநாட்டில் இருக்க காதலனுடன் கப்பலில் ஏறியுள்ளார்.

அந்த பெண்ணின் கணவர் ஐரோப்பிய நாட்டில் வசிப்பதாக கூறப்படுகிறது. அங்கு உறக்கமின்றி உழைக்கும் குடும்பத்தைக் காப்பாற்ற ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், மனைவி வேறொருவருடன் கனடாவுக்குப் படகில் சென்றுள்ளார்.

இந்நிலையில் கணவன் மனைவியை தன்னுடன் வரவழைக்க தயாராக இருக்கும் போது இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளதாக புலம்பும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது..

கணவனை ஏமாற்றி பெருந்தொகை பணத்தை ஏமாற்றிய பெண்ணுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.