யாழில் ஒரு கோடிரூபா சுருட்டிய ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் பொறுப்பதிகாரி !

ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் யாழ்ப்பாண விற்பனை நிலையத்தின் பொறுப்பதிகாரி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

10 மில்லியனுக்கும் அதிகமான மோசடி செய்ததாக அந்த அதிகாரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,

சந்தேக நபர், கூட்டுத்தாபனத்தின் பொருட்களை விற்பனை செய்யும் போது அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய பத்திரங்களை மோசடியான முறையில் மாற்றியமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீண்டகால விசாரணையின் பின்னர் இந்த மோசடி தொடர்பில் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, சந்தேகநபரான அதிகாரியினால் ரூ.10,329,480 மோசடி செய்யப்பட்டுள்ளதாக சிஐடி தெரிவித்துள்ளது.