நாளையதினம் மதுபானங்கள் விற்பனைக்கு தடை !

பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்கள் உட்பட தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் நாளை முதல் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை மற்றும் ரிதிமல்யத்த பிரதேச செயலகப் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.