தைப்பொங்கலுக்கு மறுநாள் என்பதால், எதிர்வரும் திங்கட்கிழமை (16) தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு பரிசீலித்து வருவதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும் விடுமுறை வழங்குவதில்லை என கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ. அரவிந்த் குமார் கூறினார்.
இந்த தவணைக்கான பாடசாலை நாட்களின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.