யாழில் பொங்கள் விழாவை சிறப்பிக்க வந்த ஜனாதிபதி ரணில் !

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

தேசிய பொங்கல் விழா யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க அண்மையில் யாழ். பலாலி விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் நாகவிகாரைக்கு சென்று இராஜாங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, பிற்பகல் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலில் பொங்கல் வைபவத்தில் கலந்துகொள்வதுடன், அங்கு இடம்பெறும் நிகழ்விலும் கலந்துகொள்ளவுள்ளார். 3 மணிக்கு துர்காதேவி மண்டபம்.