யாழில் உரிமையாளர் இன்றி தனித்து நின்ற கே.டி.ம் பைக் பொலிஸாரல் மீட்பு !

யாழில் உரிமையாளரின்றி தரித்து வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று இன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவமானது யாழ். அச்சுவேலிப் பகுதியில் இந்த பைக்கானது நின்றுள்ளது.

அச்சுவேலிப் பிரதான வீதியில் உள்ள கூட்டுறவு கிராமிய வங்கிக்கு முன்பாக நேற்று (14.01.2023) இரவு முதல் இன்று (15.01.2023) காலை வரை மோட்டார் சைக்கிள் ஒன்று தன்னந்தனியாக நின்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் அச்சுவேலிப் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

குறித்த மோட்டார் சைக்கிளை பொலிஸார் மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.