இ.போ.ச பேருந்தில் இருந்து தவறி விழுந்து மாணவன் பலி!

பயணித்த பேருந்தில் இருந்து தவறி விழுந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

உயிரிழந்த மாணவன் நாவலப்பிட்டி உடஹிந்தென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவன் எனவும் அவர் நாவலப்பிட்டி அனுருதகுமார தேசிய பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (15) காலை நாவலப்பிட்டி நகரில் உள்ள விசேட வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த குறித்த மாணவன் தனது வீட்டிற்கு அருகில் இறங்க முற்பட்ட போது கீழே விழுந்து அருகில் இருந்த மண் மேட்டில் மோதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

இரவு ஏழு மணியளவில் பேருந்து நிறுத்தப்படுவதற்கு முன்னர் பேருந்தில் இருந்து இறங்க முற்பட்ட போதே குறித்த மாணவன் இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, பஸ்ஸின் சாரதி குருந்துவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை கம்பாலா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.