யாழில் திடீரென அதிகரிக்கும் நோயாளர்களின் எண்ணிக்கை ! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை !

இந்த வருடத்தின் முதல் இரண்டு வாரங்களில் 4 ஆயிரத்து 178 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், நோயாளர்களின் எண்ணிக்கை 871 ஆகும்.

அத்துடன், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கம்பஹா மாவட்டத்தில் 846 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 224 நோயாளர்களும், கண்டியில் 190 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

அத்துடன், இம்மாதம் முதல் இரண்டு வாரங்களுக்குள் யாழ்ப்பாண மாவட்டத்திலும் 255 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.